இந்த வலைப்பதிவில் தேடுTAMIL RADIO

புதன், 21 செப்டம்பர், 2011

ப்ரோக்கோளி சமைக்கும் முறை





கோளிஃப்ள்வரைப்போலவே பிரிக்க வேண்டும். பிரிக்க முடியாத பெரிய துண்டுகளை வேண்டுமானால் சிறிதாக வெட்டிக் கொள்ளலாம்.சிறிது நேரம் உப்பு நீரில் போட்டு வைத்திருந்து புழுக்கள் இருந்தால் வெளியான பிறகு ஆவியில் மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்களுக்கு வேக விட்டு எடுக்கவும்.பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு 2 சிறிய வெங்காயம்,2பல் பூண்டு ,சிறு துண்டு இஞ்சி இம்மூன்றையும் இடித்துப் போட்டு[உறைப்புக்கு வேண்டுமானால் 4 சிவப்பு மிளகாயையும் சேர்க்கலாம்] நனகு வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து உப்பும் இட்டு கடைசியாக அரைவேக்காடாக வெந்திருக்கும் ப்ரோக்கோளியையும் போட்டு கிளறி இறக்கி சூடு ஆறுவதற்குள் சாப்பிட வேண்டும். இது நம் இந்தியர்களுக்கு ஒத்துப் போகும் ரெசிபி. சாப்பிட்டு பார்த்து சொல்லுங்களேன். எப்படியிருந்தது என்று.